Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை உடைந்து ரோட்டில் பாயும் கழிவுநீர் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

Print PDF

தினகரன்                  19.11.2010

பாதாள சாக்கடை உடைந்து ரோட்டில் பாயும் கழிவுநீர் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

கோவை, நவ. 19: பாதாள சாக்கடை திட்ட பணிகளை சரியாக முடிக்காமல் விட்ட தால் ரோட்டில் கழிவுநீர் பாய்கிறது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறி பெண் கவுன்சிலர் கண் கலங்கினார். மா நகராட்சி கூட்டத்தில் கார சார விவாதம் நடந்தது.

கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், மாநகரா ட்சி கமிஷனர் அன்சுல் மிஸ் ரா, மேற்பார்வை பொறியா ளர் பூபதி, நகர பொறியாளர் கருணாகரன், செயற்பொறியாளர்கள் சுகுமார், கணேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர் (72வது வார்டு) சாந்தகுமாரி பேசுகையில், " காந்திமாநகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய வீடுகளில் அமைக்கப்பட்ட பாதாள சாக் கடை உடைந்த நிலையில் காணப்படுகிறது. சாக்கடை ரோட்டில் ஓடுகிறது.

பொதுமக்கள் கழிவறைகளை பயன்படுத்த முடி யாமல் தவிக்கிறார்கள். கழிவு நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் புகார் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகையை கூட மக்கள் சரியாக கொண் டாட முடியாமல் தவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கவில் லை. வார்டு மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்த்தால் தான் நிலைமை தெரியும், " என்றார்.

கவுன்சிலர் சாந்தகுமாரி பேசியபோது கண் கலங்கினார். அதிகாரிகள் பணி செய்ய தாமதம் செய்வதாக புகார் கூறியதால் கூட்டத் தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் சுப்புலட்சுமி (55வது வார்டு) பேசுகையில், " பாதாள சாக்கடை சேம்பர் உடைந்து ரோட்டில் கழிவு வெள்ளம் ஓடுகிறது.

இதை சரி செய்வதில் லை. பொதுமக்கள் எங்களை பார்த்து, நீங்கள் ஏன் கவுன்சிலராக இருக்கிறீர்கள். நீங் கள் இதற்கு லாயக்கில்லை, பதவியை ராஜினாமா செய்யுங்கள், என சத்தம் போடுகிறார்கள். களி மண் ரோட் டில் சாக்கடை வெள்ளம் போ னால் மக்கள் எப்படி வசிக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் இதை ஏன் கவனிப்பதில்லை, " என்றார்.

64வது அ.தி.மு.க கவுன்சிலர் மெகர்பானு பேசுகை யில், " சேர்மன் ராஜூ நகர் பகுதியில் குடிசை மேம்பா ட்டு திட்டத்தில் ஒரு ஆண்டி ற்கு முன் பாதாள சாக்கடை பணி துவங்கியது. ஆனால் முடிக்கவில்லை. ரோடு தோண்டிய நிலையில் இருக்கிறது. மக்கள் நடக்க முடி யாமல் தவிக்கின்றனர். எப்போது பணி முடியும் என தெரியவில்லை, " என்றார்.

செயற்பொறியாளர் சுகுமார் பதிலளித்து பேசுகை யில், " காந்திமாநகர் பகுதியில் 1.5 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை பணி பல்வேறு கட்டமாக நடந்தது. 1 கோடி ரூபாய் செலவில் ரோடு பணி நடத்தப்பட்டது. சாக்கடை பணிக்கு ஆண்டு தோறும் 25 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. வீட்டு வசதி வாரிய வீடுகளில் அமைக்கப்பட்ட சாக்கடை குழாய் களி மண்ணால் கீழே இறங்கி விட்டது. அதை சரி செய்யும் பணி படிப்படியாக நடத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் பணியை நடத்தி முடிக்க முடியாத நிலையிருக்கிறது. புகார் பெறப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது, " என்றார்.

மாநகராட்சியில் யார் பினாமி....

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் மெகர் பானு, சாக்கடை பணி நடக்கவில்லை என புகார் கூறியபோது, மேயர் வெங்கடாசலம், எம்.எல்.., வேலுமணிக்கு வேண்டியவர் தான் ஒப்பந்த பணி எடுத்துள்ளார் என கூறினார். அப்போது மெகர்பானு கோபமடைந்து, ஏன் பணி நடத்தி முடிக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லுங்கள். எம்.எல்.ஏவை இதற்கு இழுத்து வைத்து பேசுகிறீர்கள் என்றார். இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் நடராஜ், " மாநகராட்சியில் யார் யாருக்கு பினாமி இருக்கிறார்கள் என வெளிப்படையாக சொல்லட்டுமா, " என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.