தினகரன் 20.11.2010
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கூட்டம்
கிருஷ்ணராயபுரம், நவ. 20:கிருஷ்ணராயபுரம் பேரூரா ட்சி கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மதியழகன், நிர்வாக அதிகாரி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அக்டோபர் மாத பிறப்பு இறப்பு, வரவு செலவு கணக்குகள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. வளையர்பாளையம் மயானம் செல்லும் சாலை வழியில் தெருவிளக்குகள் அமைப்பது குறித்து விவாதித்தல் உட்பட 4 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் சுந்தரவடிவேல், ஆறுமுகம், மருதநாயகம், தர்மர், இளங்கோவன், அம்பிகாபதி, கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி எழுத்தர் இந்திரஜித் நன்றி கூறினார்.