தினகரன் 20.11.2010
மேல்விஷாரத்தில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் ரூ40 லட்சத்தில் திட்டப்பணிகள்
ஆற்காடு, நவ.20: ரூ40 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப்லைன் பணிகள் செய்வது என்று மேல்விஷாரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியின் அவசர கூட்டம் அதன் தலைவர் முகமது கலிமுல்லா தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் அஸ்நாத் அகமது, செயல் அலுவலர் மணிச்சாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு சாலை வசதி திட்டத்தின்கீழ் ரூ1.80 கோடியில் சாலைகள் அமைக்க வந்துள்ள ஒப்பந்தப்புள்ளிகளை அங்கீகரிப்பது. ரூ40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப்லைன் பணிகளை உடனடியாக நிறைவேற்றுவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.