Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அய்யலூர் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமலர்                  20.11.2010

அய்யலூர் பேரூராட்சிக் கூட்டம்

வடமதுரை: அய்யலூர் பேரூராட்சிக் கூட்டம் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மத்தியாஸ், துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். அய்யலூர் பேரூராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்தில் 50 லட்ச ரூபாய்க்காக ரோடு பணிக்கும், களர்பட்டியில் உள்ள ஆழ்குழாய் ஒன்றில் மினிபவர் பம்ப் பொறுத்து, குடிநீர் தொட்டி அமைப்பது என முடிவு செய்யப்பட்டதுஇதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நவம்பரில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் அய்யலூர் முராரிசமுத்திரம்குளம், தும்மினிக்குளத்தில் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மரக்கன்றுகளை பாதுகாப்புடன் வளர்க்க வேலி அமைக்கவும், பாதுகாவலர் ஒருவர் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.