தினமணி 20.11.2010
நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தல்
மன்னார்குடி
, நவ. 19: மன்னர்குடி நகரின் பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.மன்னார்குடி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் தலைவர்
(பொ) ஆர். தமிழரசி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு
, ஆணையர் எஸ். மதிவாணன், பொறியாளர் ஏ. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்
:ஏ
.வி.பி.கோபி, மு. சிவக்குமார், எஸ். கண்ணதாசன்: அண்மையில் பெய்த மழையால் பந்தலடி, ஆசாத் தெரு, பெரிய கம்மாளத் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டுள்ளனர். மேலும், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் உள்ளது.அ
. சுதா: நகராட்சித் திட்டப் பணி, பொதுநிதி குறித்த தகவல்களை அறிக்கையாக உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.எம்
.எஸ். வீரக்குமார், எம். ராஜாசந்திரசேகரன்: சிங்காரவேலு உடையார் தெரு கழிவுநீர் ஓடை, சட்டிருட்டி வாய்கால் ஆகியவை தூர்வாரி சீரமைக்கப்படாததால், மழைக் காலங்களில் நகரப் பகுதி குடியிருப்புகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.அ
. ஆனந்தராஜ்: நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படைப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. திட்டப் பணிகள் குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யாமல், கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை எதிர்க்கிறோம்.கை
. கலைவாணன்: நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை பழுது நீக்கி, இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே
. வடுகநாதன்: நகரப் பகுதியில் துப்பரவுப் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்றவர் வேறு மாநிலத்தில் உள்ளார். புதிதாக மாற்று நிறுவனத்திற்கு பணி செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும். தலைவர் (பொ) ஆர். தமிழரசி: மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய தகவல்கள் உறுப்பினர்களுக்கு தபால் மூலம் வழங்கப்படும், ஜேசிபி வாகனத்தை இயக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மழைக் காலத்தை முன்னிட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நகராட்சி சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.