Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் திட்டம் செயல்படாமல் ஆக்கிரமிப்பு நகராட்சி நிலம் மீட்கவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                22.11.2010

குடிநீர் திட்டம் செயல்படாமல் ஆக்கிரமிப்பு நகராட்சி நிலம் மீட்கவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, நவ. 22: மன்னார்குடி நகரத்திற்கு வடவாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளன. அத்திட்டம் தொடர் ந்து செயல்படாமல் போன தால் ஆக்கிரமிக்கப்பட்டு ள்ள நிலத்தை மீட்டு நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் இந்நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடுவூர் வடவாற்றிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து இங்குள்ள நீர் நிலை களை நிரப்பவும், அத்தண் ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு 13 மைல் தூரத்திற்கு 78 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கப்பட்டது.

இருப்பினும் அக்காலகட்டத்தில் தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்போது அந்த நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இந்நிலையில் டி.எஸ்.சாமிநாத உடையார் என்பவர் நகராட்சி தலைவ ராக இருந்தபோது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்த நிலங்களை மீட்டு வடுவூர், வடுவூர் வடபாதி, தென் பாதி, வடுவூர், புதுக்கோ ட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், காரக்கோ ட்டை, நெடுவாக்கோட்டை உட்பட 7 கிராமங்கள் வழி யாக மன்னார்குடிக்கு வாய் க்கால் வெட்டப்பட்டு மன்னார்குடியில் உள்ள செங்கு ளம், ஆனந்த விநாயகர் கோயில் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரப்பப்பட்டன. இதுதவிர மதுக்கூர் சாலை அருகே நகராட்சி நீர்தேக் கம் அமைத்து குடிநீர் சுத்தகரிப்பு செய்து குடி நீர் வழங்கப்பட்டது.

அத்திட் டம் தொடர்ந்து காலமாற்றத்தில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு மீண்டும் தொடர்ந்த தால் கால்வாய் கள் தூர் ந்து போயின. இந்த குடிநீர்திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டு முற்றிலும் கைவிடப்பட்டது. இந்நிலையில் நகராட்சி விலை கொடுத்து வாங்கிய 13 மைல் தூரம் உள்ள 78 ஏக் கர் நிலப்பரப்பும் முழுமையாக தனியாருடைய ஆக்கிரமிப்பில் உள்ளது.

இன்றை சூழ்நிலையில் மீண்டும் இந்த குடிநீர் திட்டம் செயல்படுவதற்கு வாய்ப்பில்லை என் பதால் இந்த குடிநீர் திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தை மீட்டு நகராட்சியிடம் ஒப்படைக்க வேண் டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி முன்னாள் நகராட்சி தலைவர் சிவா ராஜமாணிக்கம் கூறியபோது, சாமிநாத உடையார் நகராட்சி தலைவராக இருந்தபோது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நான் நக ராட்சி தலைவராக இருந்த போது இந்த நிலைத்தை அனுபவித்து வருபவர்களி டம் விற்பனை செய்துவிட்டு அந்த தொகையை நகராட்சி வருவாயில் சேர் த்து கொள்ளலாம் என்ற யோசனை இருந்தது. ஆனால் அந்த யோசனை நடைமுறைப்படுத்தவில்லை. இனியும் காலம் கடத்தாமல் உடனே நில த்தை மீட்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.