தினகரன் 22.11.2010
பாபநாசம் பேரூராட்சி கூட்டம்
பாபநாசம்,நவ.22: பாபநாசம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் சேக்தாவூது தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கதிரேசன், செயல் அலுவலர் சவுந்திரநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நியமனக்குழு உறுப்பினர் மணிகண்டன், கவுன்சிலர்கள் துரை, சரவ ணன், பாலகிருஷ்ணன், சத்தியவாணி, சண்முகம், வசந்தா, மேரி ஜோஸ்பின், சீனிவாசன், சரோஜா, இந்திரா, ஜெனட் ஆனந்தி, செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ76.40 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைப்பது, பேரூராட்சியில் தற்போது நடை பெறும் புதிய அலுவலக கட்டடப்பணி மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது உள்பட பல்வேற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.