தினகரன் 23.11.2010
இரணியல் பேரூராட்சி கூட்டம்
திங்கள்சந்தை
, நவ.23: இரணியல் பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரசம் கவுன்சிலர்கள் மகாலிங்கம், புஷ்பம், முருகன், ஆர்.வி.தாஸ், ஐயப்பன் பிள்ளை, ஷீலா, சிவதாணு, ஸ்ரீரெங்கநாதன், ஜலஜா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட கக்கோடு தாமரைக்குளம் முதல் ஆத்திவிளை வரை சாலை ரூ
18 லட்சத்து 17 ஆயிரம் செலவில் சிமென்ட் தளம் அமைத்தல், கண்ணாட்டுவிளை முதல் மேலக்கோடு வரை ரூ33 லட்சத்து 56 ஆயிரம் செலவில் சிமென்ட் தளம் அமைத்து சாலையை மேம்படுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.