Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கூட்டம்

Print PDF

தினமணி          24.11.2010

தெற்கு மண்டலத்தில் குறைதீர்க்கூட்டம்

மதுரை, நவ. 23: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 31 முதல் 43 வரையிலான வார்டுகள், 61 முதல் 65 வரையிலான வார்டுகளுக்கான மக்கள் குறைதீர்க் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர்எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. ராமகிருஷ்ணநகரைச் சேர்ந்த சின்னான் என்பவர் வீட்டுவரி பெயர் மாற்றம் குறித்து மனு அளித்தார். இதை பரிசீலித்த மேயர், உடனடியாக வீட்டின் பெயர் மாற்றி அதற்கான ரசீது அளித்து நடவடிக்கை எடுத்தார்.

மேலும், பொன்மேனி குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதை அகற்றுமாறு கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலித்து, நீரினை மழைநீர் வாய்க்காலில் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும், தொடர்ந்து குடிநீர், பாதாளச்சாக்கடை அடைப்பு போன்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதில் மண்டலத் தலைவர்கள் அ.மாணிக்கம், மாமன்ற உறுப்பினர்கள் அழகர்சாமி, கலைமதி, கா.ரா.முருகேசன், மாரியப்பன், போஸ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், நகரமைப்பு அலுவலர் முருகேசன், மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.