தினமணி 27.08.2009
ராசிபுரம் நகரில் இரு உயர் கோபுர மின் விளக்கு
ராசிபுரம், ஆக.26: ராசிபுரம் நகராட்சி போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் இரு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கு கோபுரங்கள் இயக்கி வைக்கும் விழா செவ்வாய்க்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.
விழாவில் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் தலைமை வகித்தார். ராசிபுரம் எம்எல்ஏ., கே.பி.ராமசாமி முன்னிலை வகித்தார். விழாவில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் எஸ்.காந்திசெல்வன் பங்கேற்று மின் விளக்கு கோபுரங்களை இயக்கி வைத்தார்.
இவ்விழாவில் நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம், நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.ரங்கசாமி, உறுப்பினர் வி.பாலு, திமுக நெசவாளர் அணி ஆர்.பிரபாகரன், என்.ஆர்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்