தினகரன் 25.11.2010
தாந்தோணி நகராட்சியில் தேங்கிய மழைநீர் அகற்றம்
கரூர், நவ. 25: கரூர் பகுதியில் பெய்த மழை காரணமாக தாந்தோணி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இவற்றை நகராட்சி தலைவி ரேவதி ஜெயராஜ் ஆய்வு செய்தார்.
திண்ணப்பாநகர், சுங்ககேட் அருகில் உள்ள கணபதிநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியால் தேங்கி கிடந்தது. இந்த இரு இடங்களிலும் பொக்ளைன் எந்திரம் உதவியுடன் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நேற்று நடைபெற்றது.
நகராட்சி தலைவி ரேவதிஜெயராஜ், பணி மேற்பார்வையாளர் மலர்க்கொடி, சுகாதார ஆய்வாளர் சதீஷ்சாய்நாத், மேஸ்திரி மணி, செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். தேங்கிய நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வடிகால்களில் கொண்டு விடப்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த நீர் வெளியேற்றப்பட்டது.