Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மூன்றாம் நிலை நகராட்சி பணியாளர்கள்மீண்டும் பேரூராட்சிக்கு திரும்ப அனுமதி

Print PDF

தினமலர்               26.11.2010

மூன்றாம் நிலை நகராட்சி பணியாளர்கள்மீண்டும் பேரூராட்சிக்கு திரும்ப அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்:மூன்றாம் நிலை நகராட்சிகளில் பணி புரியும் உதவியாளர், தலைமை எழுத்தர்கள் மீண்டும் பேரூராட்சியில் பணிபுரிய அனுமதித்து அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 2004ல் பேரூராட்சிகளாக செயல்பட்டு வந்தவைகளில் சிலவற்றை மூன்றாம் நிலை நகராட்சிகளாக அரசு தரம் உயர்த்தியது. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பணி தொடர்பான விஷயங்கள் அனைத்திற்கும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்திற்கோ, நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் நகராட்சி ஊழியர்கள் தங்களை மீண்டும் பேரூராட்சிகளில் பணி புரிய அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், பேரூராட்சி பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த மூன்றாம் நிலை நகராட்சிகளில் பணிபுரியும் தலைமை எழுத்தர், உதவியாளர் ஆகியோர் மீண்டும் அத்துறைக்கு செல்ல அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். விருப்பம் தெரிவித்தவர்கள் பேரூராட்சி இயக்குனர் அலுவலக்தை தொடர்பு கொண்டு, பணியிடங்கள் பற்றிய விபரத்தை பெற்று கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.