Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டுமனை அங்கீகாரம் குறித்த குறைதீர் கூட்டம்

Print PDF

தினமலர்               26.11.2010

வீட்டுமனை அங்கீகாரம் குறித்த குறைதீர் கூட்டம்

ஓசூர்: ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் கட்டிடங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கு எளிய முறையில் அங்கீகாரம் பெறுவது குறித்த குறைதீர் கூட்டம் இன்று (நவ.,26) நடக்கிறது.
கலெக்டர் அருண்ராய் வெளியிட்ட அறிக்கை: ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்திற்குட்பட்ட நகராட்சி, மத்கிரி டவுன் பஞ்சாயத்து மற்றும் புறநகர் பஞ்சாயத்தில் வீட்டுமனைகள் மற்றும் கட்டிடங்களுக்கு புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் அனுமதி பெறுவதில் பல்வேறு இடர்பாடுகளை சந்திப்பதாக பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

இந்த குறைகளை களைய ஓசூர் நேதாஜி சாலையில் உள்ள புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் இன்று எளிய முறையில் வீட்டுமனைகளுக்கு, கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவது குறித்த குறைதீர் கூட்டம் நடக்கிறது. தமிழக நகரமைப்பு துறை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் தலைமை வகித்து பொதுமக்கள் குறைகளை கேட்டறிகிறார். முகாமில், ஓசூர் நகராட்சி, மத்திகிரி டவுன் பஞ்சாயத்து மற்றும் புறநகர் பஞ்சாயத்து மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கட்டிடங்கள், பல மாடி கட்டங்கள், தொழிற்சாலைகள், வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெறுவதில் உள்ள குறைகளை தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்யலாம்.