Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குறை தீர்க்கும் கூட்டத்தில் 45 மனு மீது உடனடி தீர்வு

Print PDF

தினகரன்              29.11.2010

குறை தீர்க்கும் கூட்டத்தில் 45 மனு மீது உடனடி தீர்வு

செங்கல்பட்டு, நவ.29: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், கூடலூர், கடம்பூர், காட்டாங்கொளத்தூர் பகுதி மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறைமலைநகர் சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்தது.

திருப்போரூர் எம்எல்ஏ மூர்த்தி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சசிகலா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சோபியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், கங்காதரன், ஜோஸ்வா, ஆர்.. லோகநாதன், கவுன்சிலர் ரவிகிருஷ்ணன், பாமக இளைஞரணி செயலாளர் சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், புதிய ரேஷன் கார்டு கேட்டு 255 பேரும், முதியோர் உதவித்தொகை கேட்டு 130 பேரும், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி கேட்டு 5 பேரும், கலப்பு திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகள் நிதியுதவி போன்றவை கேட்டு மொத்தம் 421 பேரும் மனு கொடுத்தனர். 45 மனுக்களை உடனே பரிசீலித்து ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

மூர்த்தி எம்எல்ஏ கூறுகையில், "அடுத்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் 15 நாளில் நடக்கும். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி பேரூராட்சி, திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்" என்றார்.