Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நடைபாதை கடைகளுக்கு கட்டணம் நிதிக்குழு மீண்டும் ஒத்திவைப்பு

Print PDF

தினகரன்           30.11.2010

நடைபாதை கடைகளுக்கு கட்டணம் நிதிக்குழு மீண்டும் ஒத்திவைப்பு

கோவை, நவ.30: கோவை மாநகராட்சி நிதிக்குழு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் நிதிக்குழு தலைவர் நந்தகுமார், உதவி கமிஷனர்கள் ஜெயச்சந்திரன், லோகநாதன், துரைராஜ், உதவி செயற்பொறியாளர் ஞானவேல், கவுன்சிலர்கள் சிவமுருகேசன், அசோக்குமார், ராஜேந்திரபிரபு, கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கோவை நகரில் நடைபாதை வியாபாரிகள் மேம்பாட்டு திட்டத்தில், தனியார் அமைப்பு நடத்திய சர்வேயில் சுமார் 3 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் இருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு நடைபாதையோரம் கடை ஒதுக்கீடு செய்தல், கட்டணம் நிர்ணயம் செய்தல், குடிநீர், கழிப்பிட வசதி செய்து தருவது குறித்த தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒரு கடைக்கு தினமும் 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாம் என ஏற்கனவே நடந்த வியாபாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடை ஒதுக்கீடு கட்டணம் குறித்து, கூட்டத்தில் எவ்வித முடிவு எடுக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் 19ம் தேதி நடந்த வரி விதிப்பு கூட்டத்திலும் இந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஆரம்ப பள்ளி, உயர்நிலை, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வாட்சுமேன், துப்புரவு தொழிலாளர்கள், குழாய் பொருத்துநர்கள், மின் கம்பியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலம் ஒரு ஆண்டிற்கு தூய்மை பணி நடத்த 43.70 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்கான பணியை நடத்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வணிக வளாக கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு முடிந்தது.

அரசாணையின் படி, உரிம காலம் முடிந்த கடைகளுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு முந்தைய வாடகை தொகையிலிருந்து 15 சதவீதம் கூடுதல் வாடகை உயர்வு பெற்று வசூலிக்க கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது