Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பேரூராட்சிப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்'

Print PDF

தினமணி                01.12.2010

"பேரூராட்சிப் பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்'

பெ.நா.பாளையம், நவ.27: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சுகாதாரத்தைப் பேண கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

÷இப்பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

÷காமராஜ் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் மாரியப்பன் தனது வார்டில் பணிபுரிய பணியாளர்கள் சரியாக வருவதில்லை. திருவள்ளுவர் நகர் வார்டுக்கு அனுப்பப்படுகிறார் என்றார். இதனை மறுத்த திருவள்ளுவர் நகர் பகுதி கவுன்சிலர் சுப்பிரமணியம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தலைவர் அவர்களை சமாதானப்படுத்தினார்.

÷15வது வார்டு கவுன்சிலர் சிவராஜ், தொகுப்பூதிய அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களை நிர்வாக ரீதியாக முறைப்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த தலைவர், சின்னவேடம்பட்டி பேரூராட்சியில் என்ன முறை பின்பற்றப்படுகிறதோ அதுவே இங்கும் பின்பற்றப்படுகிறது என்றார்.

÷தொடர்ந்து பேசிய பாரதிநகர் பகுதி கவுன்சிலர் கோவிந்தராஜ், பேரூராட்சியின் புதிய கட்டடத்தில் பெயர் பலகை திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். அண்ணா நகர் பகுதி கவுன்சிலர் பெ.அர.கணேசமூர்த்தி நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். புதிய கடைகளை திறக்கும்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைப்பு தருவதில்லை என குற்றம் சாட்டினார்.

÷இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.