தினமணி 06.12.2010
6 அடி உயரத்தில் சிமென்ட் சாலை
இந்நிதியில் ஆற்று மட்டத்திலிருந்து சுமார் 6 அடி உயரத்தில் 215 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலம் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நகராட்சி நிர்வாகம் மூலம் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இதற்காக பக்கவாட்டுச் சுவர்கள் கட்டி முடிக்கப்பட்டு, ஒன்றரை மாதங்களாகின்றன.
இப்பணி தொடங்கும்போதே சாலையின் குறுக்கே உள்ள சில மின்கம்பங்களை அகற்றுமாறும், இவற்றை மாற்றியமைக்க கட்ட வேண்டிய கட்டணத்தை செலுத்தத் தயாராக உள்ளதாகவும் மின்வாரியத்துக்கு நகராட்சி அதிகாரிகள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்துள்ளனர்.
ஆனால் இன்று வரை இதற்கு உரிய பதில் இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மின்வாரியம் அலைக்கழிப்பதாகப் புகார் இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்துக்கு பைல் அனுப்பியுள்ளோம் என்கிறார்களாம். அங்கு கேட்டால் குடியாத்தம் அலுவலகத்துக்கு பைலை அனுப்பி விட்டோம் என்கிறார்களாம்.
மின்கம்பங்களை மாற்றியமைக்க ஆகும் செலவினத்தை செலுத்தத் தயாராக இருப்பதாக நகராட்சி நிர்வாகம் 6 மாதங்களுக்கு முன் கடிதம் அனுப்பியுள்ளது. மின்வாரியம் பதில் அளிக்காததால் பக்கவாட்டுச் சுவர் அமைத்தும் கடந்த ஒன்றரை மாதமாக பணி முடங்கிக் கிடக்கிறது. இதற்கு அரசு ஒதுக்கிய நிதியும் வங்கியில் உறங்குகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு சாலையை அமைத்து போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.