Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மீன் மார்க்கெட் ஏலம் விட எதிர்ப்பு மாநகராட்சியில் பரபரப்பு

Print PDF

தினகரன்               07.12.2010

மீன் மார்க்கெட் ஏலம் விட எதிர்ப்பு மாநகராட்சியில் பரபரப்பு

கோவை, டிச. 8: கோவை மாநகராட்சி சார்பில் உக்கடம் செல்வபுரம் ரோட்டில் 1.37 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒருங் கிணைந்த மீன் மார்க்கெட் கட்டப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய இந்த கட்டடத்தில் 68 கடை அமைந்துள்ளது. இந்த கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய நேற்று மின் ஏலத்திற்கான விண்ணப்ப பதிவு நடந் தது. நேற்று மாலை வரை 150க்கும் மேற் பட்ட வியாபாரிகள் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தற்போது உக்கடம் மீன் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் சிலர், மின் ஏலம் கூடாது. மொத்தமாக 68 கடை தான் இருக்கி றது. இந்த கடைகள், தற்போது கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே போ தாது. மின் ஏலம் விட்டால் வெளி நபர் கள், குறிப்பாக வியாபாரிகள் அல்லாதவர்கள் கடைகளை கையகப்படுத்தும் நிலை உருவாகும் என தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து மின் ஏலத்திற்கான பதிவை நிறுத்துமாறு கூறினர். மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் இன்ஸ்பெக் டர் ஸ்ரீராமச்சந்திரன் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து, மின் ஏலம் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "தற்போது செயல் பட்டு வரும் உக்கடம் மீன் மார்க்கெட் டில் உள்ள கட்டடங்கள் பழுதடைந்து விட்டது. 60க்கும் மேற்பட்ட கடை இருந் தாலும் 18 கடை மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. முறைப்படி புதிய மீன் மார்க்கெட் மின் ஏல முறையில் வியாபாரிகளுக்கு ஒப்படைக்கப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகளவு பதிவு செய்து வருகிறார்கள். முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு கடைகளை வழங்கவேண்டும் என ஏற்கனவே உக்கடத்தில் மீன் கடை நடத்தி வரும் வியாபாரிகள் கேட்டனர்.

அப்படி கடை தர முடியாது. விதிமுறைப்படி தான் கடைகளை ஒப்படைக்க முடியும். வரைவோலை, மின் ஏலம் முடிந்த பின்னரே கடை ஒதுக்காத நபர்களுக்கு திருப்பி வழங்க முடியும். தரை கடை வியாபாரிகளுக்கு, மார்க்கெட்டின் ஒரு பகுதியில் கடை ஒதுக்க முடிவு செய்திருக்கிறோம். ஆனால், கட்டணம் குறித்து விரைவில் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்," என்றார்.

மாநகர மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகி சுபேர் கூறுகையில், " கடந்த 21 ஆண்டுகளாக உக்கடத்தில் மாநகராட்சி கட்டடத்தில் கடை நடத்தி வருகிறோம். கட்டடம் இல்லாதபோதே இங்கே பல தலைமுறையாக மீன் கடை நடத்தப்படுகிறோம். மின் ஏலம் மூலம் காலம் காலமாக கடை நடத்தி வந்தவர்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது. புதிய மீன் மார்க்கெட்டில் 68 கடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 கடை மீன் வளர்ச்சி கழகத்திடம் விடப்படவுள்ளது. 10 ஆட்டிறைச்சி கடை, 10 கருவாடு கடை, 46 மீன் கடை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் புதிய கடை கேட்டு 50 ஆயிரம் ரூபாய்க்கு வரைவோலை வழங்கியிருக்கிறோம். மாநகராட்சி நிர்வாகம், மின் ஏலம் மூலம் அதிக நபர்களை வரவழைக்க முடிவு செய்து விட்டது. இது ஏற்புடையதல்ல. பழைய கடையில் 60க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருக்கிறோம். மின் ஏலம் வந்தால் கடை கிடைக்காது. எனவே நாங்கள் கொடுத்த வரைவோலையை திருப்பி கேட்டிருக்கிறோம். கடை கிடைக்காவிட்டால் ஏற்கனவே உள்ள இடத்தில் மீன் கடை நடத்து வோம், " என்றார்.