Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மிசோரம் மாநில நகராட்சி உறுப்பினர்கள் பெங்களூர் வருகை

Print PDF

தினமணி                      09.12.2010

மிசோரம் மாநில நகராட்சி உறுப்பினர்கள் பெங்களூர் வருகை

பெங்களூர், டிச. 8: மிசோரம் மாநில ஆஜாவெல் நகராட்சி உறுப்பினர்கள், பெங்களூர் மாநகராட்சியின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர்.

÷கடந்த நவம்பர் 3-ல் நடைபெற்ற மிசோரம் மாநில நகராட்சி தேர்தலில் ஆஜாவெல் நகராட்சியில் 18 பேர் வெற்றி பெற்றனர்.

÷முதன்முறையாக நகராட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர்கள் மாநகராட்சியின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காக சி.டி.ஜகுமா தலைமையில் 3 அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேர் புதன்கிழமை பெங்களூர் வந்தனர்.

÷துணை மேயர் தயானந்த் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். தொழில்நுட்ப ஆலோசகர் ராஜசிம்மா மாநகராட்சியின் செயல்பாடுகளை விளக்கினார்.

÷மாநகர சமூக நீதி குழுத் தலைவர் ரங்கண்ணா, உறுப்பினர்கள் சாந்தகுமாரி, நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.