தினமணி 10.12.2010
லஞ்சம்: நந்தம்பாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் இருவர் கைதுசென்னை
, டிச. 9: சென்னை நந்தம்பாக்கத்தில் கட்டட அனுமதி வழங்க ரூ 6,000 லஞ்சம் வாங்கும்போது, பேரூராட்சி செயல் அலுவலரும் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.இது குறித்த விவரம்
:சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்
, இவர் நந்தம்பாக்கத்தில் தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் 2 மாடி கட்டடம் கட்ட அனுமதி கோரி நந்தம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தை அணுகினார்.இவரது விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாஸ்
, அனுமதி வழங்க ரூ6,000-ஐ லஞ்சமாக தர வேண்டும் என நிர்பந்தித்தாராம்.இது குறித்து ஸ்ரீதர்
, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸôரிடம் புகார் அளித்தார். இதன்படி, ரூ6 ஆயிரத்துடன் தேவதாûஸ சந்திக்க ஸ்ரீதர் வியாழக்கிழமை காலையில் சென்றார். அப்போது தனது உதவியாளர் நவநீதத்தை பணம் வாங்குவதற்கு தேவதாஸ் அனுப்பினாராம்.இதையடுத்து ஸ்ரீதரிடம் இருந்து ரூ
6 ஆயிரத்தை வாங்கும் போது நவநீதமும் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் செயல் அலுவலர் தேவதாஸýம் கைது செய்யப்பட்டனர்.