Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி திட்டத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

Print PDF

தினமலர்      16.12.2010

நகராட்சி திட்டத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கல்


பொள்ளாச்சி :  பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில், நகராட்சியின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நகராட்சியின் திட்டமான "சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜர் யோஜனா' திட்டத்தின் கீழ் பிரிட்ஜ், "ஏசி' பழுது சரிபார்ப்பு மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த விழாவில், இயந்திரவியல்துறை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் (கல்வி) விஜயரங்கன் தலைமை வகித்தார்.

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். விழாவில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி பெற்ற 81 பயனாளிகளுக்கும், பிரிட்ஜ் மற்றும் "ஏசி' பழுது சரிபார்ப்பு பயிற்சி பெற்ற 12 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை ஆகிய மூன்று நகராட்சிகளை சேர்ந்த பயனாளிகளும், பொள்ளாச்சி நகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜ், சமுதாய மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.ஜெ.எஸ்.ஆர். ஒய்., திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் நன்றி கூறினார்.