Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கவுன்சிலர் தரக்குறைவான பேச்சு மாநகராட்சி அதிகாரிகள் வெளிநடப்பு : மண்டல கூட்டத்தில் பரபரப்பு

Print PDF

தினகரன்                23.12.2010

கவுன்சிலர் தரக்குறைவான பேச்சு மாநகராட்சி அதிகாரிகள் வெளிநடப்பு:மண்டல கூட்டத்தில் பரபரப்பு

கோவை, டிச 23:

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் சுயேட்சை கவுன் சிலர் அதிகாரிகளை தரக்குறைவாக விமர்சித்ததை கண் டித்து அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் ராஜூ, உதவி நிர் வாக பொறியாளர் சசிகலா, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கியதும் சுயேட்சை கவுன்சிலர் வேல்முருகன் பேசுகையில், "தடா கம் ரோட்டில் கழிப்பிடம் கட்டும் பணி பாதியில் நிற் கிறது.

இதற்கு அதிகாரிகள் தான் காரணம்," என்றார். அதிகாரிகள் இடம் மாற்றம் தொடர்பான ஒப்பீட்டு பேச் சில் பேய் போய் பிசாசு வந் தது என ஒட்டு மொத்தமாக விமர்சித்தார்.

இதற்கு கூட்டத்தில் பங் கேற்ற மாநகராட்சி அதிகாரி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கவுன்சிலரின் நாகரீகமற்ற பேச்சை கண்டித்து வெ ளியேறுவதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.

அவருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் வெளியேறினார். பின்னர் மேற்கு மண்டல தலைவர் செல்வ ராஜ் அதிகாரிகளை சமரசம் செய்த தோடு வேல்முருகன் பேசியதற்கு கண்டனம் தெரிவித் தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் பல்வேறு பணி கள் தொடர்பாக 70 தீர்மானங் கள் கொண்டு வரப்பட்டன. இதில் மேயர் மற்றும் அவரது மகள் காயத்ரி கவுன்சிலராக உள்ள வார்டுகளுக்கு மட்டும் ரூ. 70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.

மற்ற வார்டுகளுக்கு ரூ. 5 லட்சம் கூட ஒதுக்கவில்லை எனக்கூறி அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மண்டல கூட்டத்தில் கோரம் இல்லாததால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.