தினகரன் 29.12.2010
உள்ளாட்சி இடைத்தேர்தல் : வேட்பு மனு தாக்கல் இன்று கடைசிநாள்
சென்னை, டிச. 29:
மதுரை மாநகராட்சி வார்டு 45, சென்னை மாநகராட்சி வார்டு 93, ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 5 உள்பட தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 523 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களுக்கான தேர்தல் ஜனவரி 10ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக கடந்த 22ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் சுயேட்சைகள் அதிக அளவில் வேட்பு மனுதாக்கல் செய்து உள்ளனர்.
வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், அதிகமானோர் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள் அனைத்தும் நாளை பரிசீலனை செய்யப்படுகின்றன. ஜனவரி 10ம் தேதி வாக்குபதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் 12ம் தேதி எண்ணப்பட்டு 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, சென்னை, மதுரை வார்டுகளுக்கு மட்டும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரியும், ஈரோடு மாநகராட்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவரையும் தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.