தினகரன் 10.01.2011
புழல் பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்
புழல், ஜன. 10:
புழல் பேரூராட்சியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் நவநீதகுமார், கவுன்சிலர்கள் அறிவழகன், ராணி, இளங்கோ, சீனு நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, கன்னடபாளையம், புனித அந்தோணியார் நகர், அண்ணா நினைவு நகர், சிதம்பரம் நகர், சக்திவேல் நகர், புழல் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது, சாலையில் குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை போடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
புழல் தமிழ்ச்சங்க தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் வக்கீல் முருகேசன், கிருபாகரன், மங்கையர்க்கரசி, தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
துப்புரவு பணியாளர்கள் மேஸ்திரி தம்பிதுரை நன்றி கூறினார்.