Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிதம்பரத்துக்கு மேயர் கடிதம் நகராட்சி கவுன்சிலர்களுக்கு ம்பளம் வழங்க வேண்டும்

Print PDF

தினகரன்      27.01.2011

சிதம்பரத்துக்கு மேயர் கடிதம் நகராட்சி கவுன்சிலர்களுக்கு ம்பளம் வழங்க வேண்டும்

புதுடெல்லி, ஜன.27;

டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்று கூறி மத்திய உள்துறை ப.சிதம்பரத்தக்கு மேயர் பிரிதிவிராஜ் சகானி கடிதம் எழுதியுள்ளார்.

இது பற்றி அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவது போல் தங்களுக்கு மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். மும்பை, அகமதாபாத் மாநராட்சிகளில் கவுன்சிலர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதுபோல், டெல்லி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அத்துடன் கூட்டத்தில் கலந்து கொள்வ தற்கு வழங்கபடும் படியை ரூ.300 லிருந்து ரூ.1000மாக உயர்த்த வேண்டும். மும்பை மாநகராட்சியில் கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், அகமதாபாத் மாநகராட்சியில் மாதம் ரூ.3,ஆயிரமும் கவுன்சிலர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் எம்.எல்.ஏ.க்களுக்கு சிகிச்சை பெற சலுகை அளிக்கப்படுகிறது. அதேபோல், கவுன்சிலர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன் கவுன்சிலர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டமும் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் மேயர் சகானி கூறியுள்ளார்.
 
சகானி