Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் திருவொற்றியூருக்கு 12 வார்டுகள்

Print PDF

தினமலர்       02.02.2011

சென்னையில் திருவொற்றியூருக்கு 12 வார்டுகள்

ஆர். குமார்/திருவொற்றியூர் : திருவொற்றியூர் நகராட்சியில் தற்போதுள்ள 48 வார்டுகள், சென்னை மாநகராட்சியுடன் இணைவதால், சடையங்குப்பம் ஊராட்சியின் சில பகுதிகளையும் சேர்த்து 12 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஏரியாக்கள், எந்த வார்டுகளில் வருகிறது என்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை இணைந்து விரிவாக்கம் செய்யப்படுகிறது. 155 வார்டுகள் 200 வார்டுகளாக உயர்த்தப்படுகிறது. திருவொற்றியூர் நகராட்சி, சென்னையுடன் இணைகிறது. தற்போது நகராட்சியில் உள்ள 48 வார்டுகள், மாநகராட்சியில் இணைவதால் 12 வார்டுகளாவது பிரிக்கப்படுகிறது. சடையங்குப்பம் ஊராட்சியின் சில பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.தற்போதைய திட்டப்படி சென்னை மாநகராட்சியின் மூன்றாவது வார்டு முதல் 14வது வார்டு வரை திருவொற்றியூர் பகுதியில் வருகிறது. புதிய மாநகராட்சி வார்டுகள், அதில் வரும் ஏரியாக்கள் பற்றிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.மாநகராட்சியின் மூன்றாவது வார்டில் 1,2,3,4, நான்காவது வார்டில் 46,47,48ம், ஐந்தாவது வார்டில் 5, 6, 7, 8, 9 வார்டுகளும் அமைகின்றன. ஆறாவது வார்டில் 43,44,45, ஏழாவது வார்டில் 40,41,42, எட்டாவது வார்டில் 10,11,12 வது வார்டுகளும், ஒன்பதாவது வார்டில் 17,18,19,20 வார்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.நகராட்சியின் 31,32,33,34 வார்டுகள் மாநகராட்சியின் 10வது வார்டாகவும், 35,36,37, 38,39 வார்டுகள் 11வது வார்டிலும், 26, 27, 28, 29, 30 வார்டுகளும் 12 வது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள 35, 36, 37,38, 39 வார்டுகள் மாநகராட்சியின் 13வது வார்டிலும், 26, 27, 28, 29 வது வார்டுகள் மாநகராட்சியின் 14 வது வார்டையும் உள்ளடக்கியதாக பிரிக்கப்பட்டுள்ளன. நகராட்சி முதன்மைச் செயலரின் அறிவுரைப்படி, புதிய வார்டுகளுக்கு நகராட்சி ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியுள்ளது.திருவொற்றியூர் நகராட்சியில் தற்போது 48 கவுன்சிலர்கள் உள்ளனர். வரும் உள்ளாட்சித் தேர்தலின் போது, திருவொற்றியூரிலிருந்து மாநகராட்சிக்கு 12 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவர்.திருவொற்றியூர் நகராட்சி, மாநகராட்சியில் இணைவதன் மூலம், அடிப்படை வசதி அனைத்தும் பெற முடியும் என, பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.