தினமலர் 22.12.2011
மண்டல குறை தீர்க்கும் கூட்டம் : மாநகராட்சியில் அறிமுகம்
மதுரை :மதுரை மாநகராட்சியில் முதன்முறையாக, மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.
மாநகராட்சியில் மண்டலம் குறைதீர்க்கும் கூட்டம், மண்டலத்தலைவர்கள் தலைமையில் நடப்பது வழக்கம். குறைகளை நேரடியாக தீர்க்க, மேயர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மண்டலம் 2 புதூரில் முதல் மண்டல குறை தீர் கூட்டம் நேற்று நடந்தது.
கமிஷனர் நடராஜன் தலைமை வகித்தார். மேயர் ராஜன்செல்லப்பா, துணை மேயர் கோபாலகிருஷ்ணன் மனுக்களை பெற்றனர். போஸ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மண்டலத்தலைவர் ஜெயவேல், கவுன்சிலர்கள் அபுதாஹிர்,மாரி, சாலினி தேவி பேசினர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நகர் பொறியாளர் மதுரம், முதன்மை நகர்நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி அலுவலர் பிரியா, நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் பங்கேற்றனர்.