தினமலர் 30.07.2012
டவுன் பஞ்சாயத்தில் 97 பேருக்கு உதவி தொகை
சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் முதியவர்கள், முதியோர் உதவி தொகை கோரி பலர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்து, தகுதியான, 97 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை மாதம் ஆயிரம் வீதம் வழங்க உத்தரவிடப்பட்டது.டவுன் பஞ்சாயத்தில் நடந்த விழாவில், தலைவர் ஜம்பு என்ற சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனபாக்கியம் வரவேற்றார்.முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் வழங்கினார்.மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் மணிமேகலை, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் கோபாகிருஷ்ணன், யூனியன் தலைவர் கருப்புசாமி, துணை தலைவர் துரைசாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் சேலையப்பன், டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் தெய்வசிகாமணி, செயல் அலுவலர் தெய்வசிகாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.