தினமணி 02.08.2012
ரூ. 13.50 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டருக்கு பூஜை
செங்கல்பட்டு, ஆக 1: செங்கல்பட்டில் குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட ரூ.13.50 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டருக்கு செவ்வாய்க்கிழமை பூஜை நடைபெற்றது. நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன் பூஜை நிகழ்வுக்கு தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்புராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.பூஜையில் தேங்காய், எலுமிச்சை ஆகியவற்றைக் கொண்டு இயல்பான பூஜையும், கோழியை வெட்டி காவுக் கொடுக்கும் பூஜையும் நடைபெற்றது.