தினமணி 02.08.2012
சிவகாசி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு
சிவகாசி, ஆக. 1: சிவகாசி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகாசி நகர்மன்றக் கூட்டம், தலைவர் வெ.க. கதிரவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றறது.
துணைத்தலைவர் கே.ஏ.ஏ. அசன்பத்ருதீன்முன்னிலை வகித்தார்.முதல்நிலை நகராட்சியாகஇருந்த சிவகாசி நகராட்சி 1998-ம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
நகராட்சியின்ஆண்டு வருமானம் ரூ. 10 கோடிக்கு மேல் இருந்தால், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்திக் கொள்ளலாம், என அரசாணை உள்ளது.தற்போது, சிவகாசி நகராட்சிக்கு ஆண்டு வருமானம் ரூ. 16.77 கோடியாகும்.
எனவே சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற தீர்மானம் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசுக்கு இதன் கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.நகராட்சிக்குள்பட்ட ப குதியில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2012-2013-படி, நகராட்சி வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளர் முருகன், சுகாதார அலுவலர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.