Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேட்டுப்பாளையத்தில் துப்புரவு பணியாளருக்கு பயிற்சி

Print PDF

தினகரன்            04.08.2012

மேட்டுப்பாளையத்தில் துப்புரவு பணியாளருக்கு பயிற்சி

மேட்டுப்பாளையம்,: தேசிய நகர்ப்புற சுகாதார கொள்கை 2008ன்படி தமிழகத்தில் மேட்டுப்பாளையம் உள்பட 9 நகராட்சி யில் நகர்ப்புற சுகாதார திட்டம் துங்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது, நகர் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, நகரில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இத்திட்டத்தின்படி தன்னார்வ தொண்டு நிறுவனமாக எக்ஸ்னோரா, மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து  மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் பணியாற்றும் 200 துப்புரவு பணியாளர் களுக்கு அவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் ஆணையாளர் இளங்கோவன் ,துணை த்தலை வர் ரமாசெல்வி, நகர்நல அலுவலர் டாக்டர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார், நகர்நல அலுவலர்கள் நல்லுசாமி, செந்தில், செல்வராஜ் கவுன்சிலர்கள் சுப்பிரமணி, மூர்த்தி ,சலிமூநீசா, திட்ட அலுவலர் விஜயானந்த், பயிற்சியாளர் வேலியப்பன் உள்பட பலர் கலந்து  கொண்டனர். குப்பைகளை தரம் பிரித்து அப்புறப் படுத்துவது, குப்பைகளை எப்படி கையாள்வது, என்பது குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.