Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடலூர் நகராட்சி புதிய ஆணையாளர் பதவியேற்பு

Print PDF

தினமணி                        07.08.2012

கூடலூர் நகராட்சி புதிய ஆணையாளர் பதவியேற்பு

கம்பம்,ஆக. 6: கூடலூர் நகராட்சியில் புதிய ஆணையாளராக ராஜேந்திரன் திங்கட்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார்.

கூடலூர் நகராட்சியில் ஆணையாளராக  பணிபுரிந்த  கண்ணன்  கடந்த  3  மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து  ஓய்வு  பெற்றார்.  இதனால்,  நகராட்சி  ஆணையாளர்  பணி  காலியாக இருந்தது.

அந்த பொறுப்பை கூடுதலாக கம்பம் நகராட்சி பொறியாளர் மணிமாறன் கவனித்து வந்தார். இந்தநிலையில் நாகர்கோவில் மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் மாறுதலாகி திங்கட்கிழமை கூடலூர் நகராட்சி ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

இவருக்கு நகர்மன்ற தலைவர்ஆர்.அருண்குமார்  மற்றும்  கவுன்சிலர்கள்,  ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.