Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி                10.08.2012

செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

செங்கம், ஆக. 9: செங்கம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சென்னம்மாள் முருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மோகன்ராஜ் வரவேற்றார். தமிழ்நாடு நகர் ஊரமைப்புத் திட்ட நிதியிலிருந்து அளிக்கப்பட்ட தொகை ரூ.10 லட்சத்தில் செங்கத்தில் பூங்கா அல்லது விளையாட்டு மைதானம் அமைக்க பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்

செங்கம் பழைய காவல் நிலையம் அருகில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும். செங்கம் தளவாநாய்கன்பேட்டையில் தெருவிளக்குகள் அமைப்பது, குடிதண்ணீர் பற்றாக்குறையைச் சரி செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.