Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உசிலை. நகராட்சி ஆணையர் பதவி ஏற்பு

Print PDF

தினமணி              11.08.2012

உசிலை. நகராட்சி ஆணையர் பதவி ஏற்பு

உசிலம்பட்டி, ஆக. 10: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குப் புதிய ஆணையர் பதவி ஏற்றார்.இந்த நகராட்சியில் கடந்த 10 மாதங்களாக ஆணையர் நியமிக்கப்படாமல் இருந்தது. பொறியாளர் தங்கப்பாண்டி ஆணையாளர் (பொறுப்பு) வகித்து வந்தார். இதனால் பணிகள் நடைபெறுவதில் சிரமம் ஏற்பட்டது.பொதுமக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து புதிய ஆணையராக ஏ.ஆர்.பாப்பமாள் நியமிக்கப்பட்டார்.

இவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.இவர் இதற்கு முன் பொள்ளாச்சி சிறப்பு நிலை நகராட்சி மேலாளராக வேலை பார்த்து வந்தார். 

இவரை நகர்மன்றத் தலைவர் யூ.பி.ஆர்.பஞ்சம்மாள், துணைத் தலைவர் பூமா கே.ஆர்.ராஜா, நுகர்வோர் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் சின்னக்கண்ணன், ஐ.ராஜா,ஜெயபால்தேவநேசன் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்தினர்.