தினகரன் 11.08.2012
உசிலம்பட்டி நகராட்சியில் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் புதிய ஆணையாளர் தகவல்
உசிலம்பட்டி, : அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உசிலம்பட்டி நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள பாப்பம்மாள் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி நகராட்சியில் ஆணையாளராக இருந்த கிருஷ்ணநந்தன் பணி ஓய்வு பெற்றார். இதனால் பொறியாளர் சரவணக்குமார் ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் பொள்ளாச்சி நகராட்சியில் மேலாளராக இருந்த பாப்பம்மாள் பதவி உயர்வு பெற்று உசிலம்பட்டி நகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பு ஏற்றார். இவருக்கு நகர் மன்ற தலைவர் பஞ்சம்மாள், நகர்மன்ற துணைத் தலைவர் பூமாராஜா மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆணையாளர் பாப்பம்மாள் கூறுகையில், ‘‘உசிலம்பட்டி நகராட்சியில் அடிப்படை தேவைகளுக்கு முன்னிரிமை அளிக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்,’’ என்றார்.