தினமலர் 13.08.2012
துப்புரவு பணி முகாம்
கொடைக்கானல்:கொடைக்கானல் நகராட்சி சார்பில், ஏரியை சுற்றி சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது. நகராட்சி கமிஷனர் பூங்கொடி, தலைவர் கோவிந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கலையரங்கத்தில் துவங்கி, சுற்றியுள்ள செடிகள், மண் அகற்றப்பட்டு நகராட்சி அலுவலம் எதிரே பணி முடிக்கப்பட்டது. மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள், துப்புரவு பணியாளர் உட்பட 50 பேர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் அசன்அலிமுகம்மது, சாமுவேல், பாண்டியராஜ் செய்திருந்தனர்.