Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல்

Print PDF

தினமலர்               16.08.2012

துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கல்

சேலம்: சேலம் மாநகராட்சியில், ஏழு துப்புரவு பணியாளர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டது.சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலத்தில், துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்த, பழனிசாமி, பெருமாள், அருக்காணி, பாலா, ராஜாமணி, பழனியம்மாள், பரிமளாதேவி ஆகிய, ஏழு பேருக்கு, ஓய்வூதியமாக, 10 லட்சத்து, 15 ஆயிரத்து, 225 ரூபாய்க்கான காசோலையையும், இரண்டு பயனாளிகளுக்கு தலா, 2, 500 ரூபாய் வீதம், 5,000 ரூபாய் ஈமச்சடங்கு மானியத்தொகையினையும், மேயர் சவுண்டப்பன் வழங்கினார்.அவருடன், மாநகராட்சி கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Last Updated on Thursday, 16 August 2012 06:35