Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திரதின விழா கோலாகலம்

Print PDF

தினமலர்               16.08.2012

மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திரதின விழா கோலாகலம்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மேயர் விஜிலா தேசியக்கொடி ஏற்றினார்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு மேயர் விஜிலா தேசியக்கொடி ஏற்றினார். துணை மேயர் ஜெகநாதன், கமிஷனர் மோகன், மண்டல தலைவர்கள் மாதவன், எம்.சி.ராஜன், ஹைதர்அலி, மோகன், நகர பொறியாளர் ஜெய்சேவியர், உதவி செயற்பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், பாஸ்கர், கருப்பசாமி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பாளை. மண்டலத்திற்கு உட்பட்ட 2 பயனாளிகளுக்கு 45 ஆயிரம் ரூபாய், தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட 5 பேருக்கு 54 ஆயிரம் ரூபாய், நெல்லை மண்டலத்தை சேர்ந்த 4 பேருக்கு 90 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 பேருக்கு 1.89 லட்சம் ரூபாய் மானியத்தை மேயர் வழங்கினார்.
ரத்ததானம் வழங்கிய கவுன்சிலர்கள் உமாபதிசிவன், டேனியல் மற்றும் சுப்புலட்சுமிக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சிப்பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற கல்லணை பள்ளி மாணவி பாத்திமா நஸ்ரின், இரண்டாம் இடம் பெற்ற ஜாஸ்மின், மூன்றாம் இடம் பெற்ற சங்கரகோமதி, எஸ்.எஸ்.எல்.சி.,யில் முதலிடம் பெற்ற கல்லணை பள்ளி மாணவி முத்துமாலை, இரண்டாம் இடம் பெற்ற விஜயலட்சுமி, மூன்றாம் இடம் பெற்ற இசக்கியம்மாளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.மண்டல வார்டு அலுவலகங்களில் அந்தந்த மண்டல தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றினர்.