Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்

Print PDF

தினமணி                         16.08.2012

தமிழகத்தில் முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்

சென்னை, ஆக. 15: தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் முறையாக விருதுகள் வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா மேடையில் இந்த விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளைத் தேர்வு செய்து ரொக்கப் பரிசு அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல் செயல்படுகிறது. அதன்படி, சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் விருதைப் பெற்றவர்கள் விவரம்:

கோவை மாநகராட்சி-ரூ.25 லட்சம் பரிசு மற்றும் சான்றிதழ்-மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் ஆணையாளர் டி.கே.பொன்னுசாமி.

சிறந்த நகராட்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பொள்ளாச்சி-நகராட்சித் தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆணையாளர் சுந்தராம்பாள்.

தேனி-அல்லி நகராட்சி-நகராட்சித் தலைவர் முருகேசன் மற்றும் ஆணையாளர் ராஜாராமன்.

நாமக்கல் நகராட்சி-நகராட்சித் தலைவர் கரிகாலன் மற்றும் ஆணையாளர் செழியன்.

சிறந்த பேரூராட்சிகள்: சிறந்த பேரூராட்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவைகளுக்கு முறையே ரூ.10 லட்சம், 5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

தென்கரை பேரூராட்சி-தலைவர் வீரமுத்துராஜபாண்டியன்-செயல் அலுவலர் கணேசன்.

முசிறி பேரூராட்சி-தலைவர் மாணிக்கம்-செயல் அலுவலர் முத்துக்குமார்.

பெருந்துறை பேரூராட்சி-தலைவர் சரஸ்வதி-செயல் அலுவலர் தன்னாசி.

கடலோரக் காவல் படையினருக்கு விருதுகள்:

கடலோரக் காவல் படையில் சிறப்பாகப் பணியாற்றிய அப்துல் காதர் அக்பர், ராகேஷ்குமார், பல்வந்த், ராஜ்குமார் டோக்காஸ் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.