மாலை மலர் 16.08.2012
சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதியில் 100 புதிய பூங்காக்கள்: ரூ.30 கோடி செலவில் அமைகிறது
சென்னை, ஆக. 16-சென்னை மாநகராட்சியுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக விரிவாக்கப்பகுதிகளில் 100 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய பூங்காக்கள் அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. ரூ. 30 கோடி மதிப்பில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதில் மரங்கள், புல் வெளிகள், விளையாட்டு பொருட்கள், யோகா மேடை உள்பட அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறுகிறது.
இந்த புதிய பூங்காக்கள் அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. ரூ. 30 கோடி மதிப்பில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதில் மரங்கள், புல் வெளிகள், விளையாட்டு பொருட்கள், யோகா மேடை உள்பட அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறுகிறது.