தினமணி 20.08.2012
சாத்தான்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டம்
சாத்தான்குளம், ஆக. 19: சாத்தான்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஆ.செ.ஜோசப் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு துணைத் தலைவர் ரா.வீரக்குமார், செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்கள் உதவியாளர் பால்ராஜ் வாசித்தார். கழிவுநீர் செல்லும் கால்வாயில் பழுந்தடைந்ததை சீர் செய்வது, புதிய வடிகால்களை அமைக்க இடம் தேர்வு செய்வது, தெரு குடிநீர் குழாய் இல்லாத தெருக்களில் புதிய குடிநீர் குழாய் அமைப்பது, கரையடி சுடலைமாட சுவாமி கோவிலில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்வது என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மன்ற உறுப்பினர்கள் ம.ஜான்சிராணி, ஏ.எஸ்.சதாசிவன், லெ.சரவணன், அழகுசுந்தரம்,ஜெ. ஜாக்குலின், மரியஞானம், பா.இந்திரா, முகம்மது இஸ்மாயில் , சுப்பிரமணியன், பிரேமா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.