தினமலர் 21.08.2012
ரூ.25 லட்சம் மதிப்பில் மின் விளக்கு அமைப்பு
நாமக்கல்: ஒருங்கிணைந்த நகர்புற அபிவிருத்தி திட்டத்தில், நாமக்கல் நகராட்சியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கை, தமிழக அமைச்சர் தங்கமணி இயக்கி வைத்தார்.நாமக்கல் நகராட்சியில், ஒருங்கிணைந்த நகர்புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், சேலம் பிரதான சாலை மையத்தில், உயர்கோபுர மின் விளக்கு (ஹைமாஸ்) அமைக்கும் பணி ,கடந்த மாதம் துவங்கியது. அப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து நிலையில், அதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் கரிகாலன் வரவேற்றார். எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலை வகித்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் செழியன், பொறியாளர் கமலநாதன், துணைத்தலைவர் சேகர், கவுன்சிலர்கள் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.