தினமலர் 23.08.2012
ஓய்வு பெற்ற 13 பணியாளர்களுக்கு ரூ.6.40 லட்சம் வழங்கல்
தஞ்சாவூர்: தஞ்சை நகராட்சியில் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் 13 பேர்களுக்கு ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான செக்குகளை நகராட்சி தலைவர் சாவித்திரி வழங்கினார்.தஞ்சை நகராட்சியில் பொது சுகாதார பிரிவில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் 13 பேர்கள் கடந்த மே மாதம் 30ம் தேதியன்று, பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து இவர்களுக்கு விடுப்பு ஊதியமாக ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான செக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடந்தது.இதில், நகராட்சி ஆணையர் ஜானகி முன்னிலை வகித்தார். 13 துப்புரவு பணியாளர்களுக்கும் விடுப்பு ஊதிய செக்குகளை நகராட்சி தலைவர் சாவித்திரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.