Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்      25.08.2012

பேரூராட்சி கூட்டம்

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம், தலைவர் பால்பாண்டியன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள பொது கழிப்பிடங்களை பராமரிப்பதற்காக, ஆகஸ்ட் 3ல் நடந்த பொது ஏலம் தொடர்பாக விவாதம் நடந்தது.

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,தங்கதமிழ்செல்வன் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கழிப்பிட பராமரிப்புக்காக நடந்த பொது ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. 18 வார்டுகளிலும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.