தினமணி 27.08.2012
பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கக் கூட்டம்
போளூர், ஆக. 26: போளூரில், தமிழ்நாடு அரசு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
.பேரூராட்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனே நிரப்பவேண்டும், பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், கீழ்நிலைப் பணியாளர்களுக்கு 20 சதவீத பதவிஉயர்வினை நடைமுறைப்படுத்தவேண்டும், மாநில முன்னுரிமை பட்டியல் (எஸ்எல்பி) உடனே வெளியிட ஆவனசெய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். போளூர் பேரூராட்சிப் பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.