Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் 6 நகர்நல மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

Print PDF

தினகரன்           31.08.2012

மாநகராட்சியில் 6 நகர்நல மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

கோவை, : கோவை மாநகராட்சி ஆறு நகர்நல மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் 20 நகர்நல மையங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோ தனை, பிரசவங்கள், அறுவை சிகிச்சை, குடும்ப நல அறுவை சிகிச் சை, கருத்தடை வளையம் பொருத்துதல், தடுப்பூசி பணிகள், காய்ச்சல் மற்றும் தொற்று நோய் கண்காணிப்பு பணிகள், இசிஜி பரிசோதனை, ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை உள் ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவற்றில், அறுவை சிகிச்சை அரங்குகளுடன்கூடிய சீதாலட்சுமி நகர்நல மையம், வி.வி.எம். நகர்நல மையம், சி.டி.எம் நகர்நல மையம், ஆர்.கே.பாய் நகர்நல மையம், மீனாட்சி நகர்நல மையம், சிங்காநல்லூர் நகர்நல மையம் ஆகிய 6 நகர்நல மையங்களின் சிறந்த சேவைக்காக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
 
டி.யு.வி நார்டு நிறுவனம் ஆய்வுசெய்து இவற்றை தேர்வுசெய்துள்ளது. மேற்கண்ட 6 நகர்நல மைய தலைமை மருத்துவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கும் விழா மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மே யர் செ.ம.வேலுசாமி சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில், மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் டாக்டர் அருணா உள்பட பலர் பங்கேற்றனர்.