Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மறைமலை நகர் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

Print PDF

தினமலர்       04.09.2012

மறைமலை நகர் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைமலை நகர் நகராட்சி ஆணையர் லட்சுமி, இரண்டு மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகப் பொறுப்பேற்றார்.தாம்பரம் நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம், கூடுதல் பொறுப்பாக, மறைமலை நகர் நகராட்சியை கவனித்து வந்தார். தற்போது சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டல அலுவலராகப் பணிபுரிந்த மனோகர், மறைமலை நகர் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
Last Updated on Wednesday, 05 September 2012 07:48