Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF
தின மணி          23.02.2013

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் எம். கோதண்டபாணி தலைமை தாங்கி பேரணியைத் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் வ.மணி, துணைத் தலைவர் பொ.தேவேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கங்கை கொண்டான் மண்டபத்தில் இருந்து பேரணி தொடங்கி பஸ் நிலையம், சுற்றுலாத்தலமாக விளங்கும் அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாக நடைபெற்றது.

இதில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், பிளாஸ்டிக் ஒழிப்பால் ஏற்படும் மக்களின் சுகாதாரம், ஆரோக்கியமான வாழ்வு குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாமல்லபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

மேலும் பிளாஸ்டிக்கின் நன்மை தீமைகள் குறிந்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
Last Updated on Monday, 25 February 2013 11:36