Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க பேரூராட்சி முடிவு

Print PDF
தினமணி         05.03.2013

துப்புரவுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க பேரூராட்சி முடிவு


துப்புரவு பணிகளை தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதென வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம், புதன்கிழமை நடந்தது. பேரூராட்சித் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தம்மாள், பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட பாடுபட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சீரான முறையில் சுகாதாரப் பணிகளை செய்யும் வகையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் துப்புரவு பணிகளை ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.