தினமணி 11.09.2009
கொடைக்கானலில் புதிய பஸ் நிலைய பணிகள்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு :
கொடைக்கானல், செப். 10: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறும் புதிய பஸ் நிலையப் பணிகளை நகர்மன்றத் தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கொடைக்கானலில் ரூ.4.30 கோடி செலவில் நவீன புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 20 மாதங்களாக பணிகள் நடைபெறுகின்றன.
ஏறக்குறைய 60 சதவீதப் பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் பார்வையிட்டு, விரைவாக பணிகள் முடிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் ராஜாராம், ஒப்பந்ததாரர் ரசூல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது:
கொடைக்கானல் புதிய பஸ் நிலையப் பணிகளை விரைவாக முடிப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஒரு சில மாதங்களுக்குள் பணியை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.